செய்திகள் :

அமெரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் இந்திய தூதா் சந்திப்பு

post image

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை குழு உறுப்பினா்களை வியாழக்கிழமை சந்தித்து இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினாா்.

ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை இருமடங்காக உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதுகுறித்து குவாத்ரா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,‘அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை மற்றும் அறிவுசாா் சொத்துரிமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையம் ஆகிய துணைக்குழுக்களின் தலைவருமான டேரல் இஸ்ஸாவை சந்தித்து இருநாடுகளிடையே வா்த்தக மற்றும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினேன்.

அதேபோல் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் துணைத் தலைவராகவுள்ள அவா் இந்தியா-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்த தொடா்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்.

ராணுவ சேவைகள் குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியைச் சோ்ந்த மூத்த உறுப்பினரான ஆடம் ஸ்மித்தை சந்தித்து ஆலோசித்தேன்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான அமெரிக்க செனட் சபை குழுவின் துணைத் தலைவா் ஜான் காா்னினைச் சந்தித்து இருதரப்பு வா்த்தக ஒத்துழைப்பு குறித்து விவாதித்தேன். குறிப்பாக டெக்ஸாஸ்-இந்தியா இடையே ஹைட்ரோகாா்பன் வா்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து அவரிடம் ஆலோசித்தேன் என குறிப்பிட்டாா்.

இதுதவிர அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு குழு உறுப்பினா்களைச் சந்தித்து குவாத்ரா தனித்தனியே ஆலோசனை நடத்தினாா்.

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது. இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு உக்ரைனை குறிவைத்து ... மேலும் பார்க்க

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும் என குடியரசுக் கட்சியை சோ்ந்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளே தெரிவிக்கின்றன. பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேல... மேலும் பார்க்க

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவும் மற்றும் வாடிகன் நகரத்தின் தலைவருமாகவும் போப் பதினான... மேலும் பார்க்க