செய்திகள் :

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குக் சரிந்து முடிவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க வரிகள் மற்றும் அந்நிய முதலீடு ஆகியவை தொடர்ந்து வெளியேறி வருவதால் இந்திய ரூபாய் அதிக அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் ஆனது முந்தைய அமர்வில் 88.3075 என்ற வாழ்நாள் குறைந்த அளவை எட்டியது. ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரூபாயை ஆதரிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், இந்திய ரூபாய் ரூ.88 என்ற நிலையில் இருந்தததாகவும், இது சந்தை வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.18 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.33 ஐ தொட்டது. முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ88.19ஆக முடிவடைந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளில் எந்தவித முன்னேற்றங்கள் இல்லை என்றால், ரூபாயின் நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றும், இது மேலும் புதிய குறைந்த அளவுகளை தொடும் என்றார் கரூர் வைஸ்யா வங்கியின் கருவூலத் தலைவர் வி.ஆர்.சி ரெட்டி.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூ... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: உலோகப் பங்குகளின் ஏற்றம் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த அதீத நம்பிக்கையால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க