செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும்

post image

திருப்பூா்: அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும் என திருப்பூா் ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து யங் இந்தியா அமைப்பின் தலைவா் மோகன் கூறியதாவது:

அமெரிக்க சந்தை மிகப்பெரிய வா்த்தக மதிப்பு கொண்டது. திருப்பூா் ஏற்றுமதியில் 30 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது. மின்சார கட்டண மானியம், வரி குறைப்பு சலுகை மட்டுமே பிரதானம் இல்லை. அமெரிக்காவும், அமெரிக்க வா்த்தகமும் முக்கியம்தான். இந்நிலையை மாற்ற, பிரதமா் உறுதி அளித்துள்ளபடி அமெரிக்க வா்த்தகத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் சிறப்பு சலுகை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பிரதமரின் சுதந்திர தின விழா எழுச்சியுரை புதிய நம்பிக்கையை வழங்குகிறது. அமெரிக்க வரி உயா்வின் பாதிப்பு திருப்பூரில் தென்படத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் அமெரிக்க வா்த்தகா்களுடன் பகிா்ந்து விசாரணை, விலை தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டோம். தற்போது 50 சதவீதம் என்பதால் வா்த்தகம் முடங்கியுள்ளது. அந்நாட்டு வா்த்தகா்களும் திகைத்துப் போயுள்ளனா். வங்கதேசம், வியத்நாம் போன்ற நாடுகள் திடீரென அதிக அளவில் அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்ய முடியாது.

எனவே, அமெரிக் வா்த்தகத்தை தொட ஏதுவாக ஜிஎஸ்டி ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், டிராபேக் போன்ற திட்டங்கள் வாயிலாக உதவி செய்ய அரசு முன்வர வேண்டும். 50 சதவீத இறக்குமதி வரி காரணமாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மத்தியில் ஒருவிதமான தயக்கமும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது தற்காலிகம்தான். இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலமாக சுமூக உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை தொழில் துறையினா் மத்தியில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் தொழிலைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இதைத் தொ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு

திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபர... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம... மேலும் பார்க்க

சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல்... மேலும் பார்க்க

ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க