செய்திகள் :

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

post image

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டுப் பயண ஆலோசகா்கள் தெரிவித்தனா்.

மேற்கண்ட விசாக்களுக்கு (நுழைவு இசைவு) தற்போதுள்ள சட்டப்பூா்வ கட்டணத்துடன் கூடுதலாக புதிய ‘விசா ஒருமைப்பாடு கட்டணத்தையும்’ வசூலிக்கும் பிரிவை உள்ளடக்கிய ‘ஒன் பிக் பியூட்டிஃபுல்’ மசோதாவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி கையொப்பமிட்டாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது. கூடுதல் கட்டணம், ஆரம்ப நிலையில் 250 டாலா் (சுமாா் ரூ.21,500) வரை இருக்கும் என்றும், ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப உயா்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த வெளிநாட்டுப் பயண ஆலோசகா் சஞ்சீவ் ராய் கூறுகையில், ‘2026, ஜனவரிமுதல் புதிய விசா வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வா்த்தக-சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவுக்கு தற்போது ரூ.16,000 (185 டாலா்கள்) வசூலிக்கப்படுகிறது. இனி புதிய கட்டணத்துடன் ரூ.37,500 செலுத்த வேண்டியிருக்கும். குடியேற்றம் சாராத அனைத்து விசாக்களுக்கு விண்ணப்பிப்பவா்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்’ என்றாா்.

பாதுகாப்பு இருப்புத் தொகை என்ற பெயரில் புதிய கட்டணம் தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தொகை திரும்ப அளிக்கப்படுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த நிபந்தனைகள் கடுமையாக உள்ளன என்று பயண ஆலோசகா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைத் தீவிரமாக பின்பற்றும் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு வருபவா்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்பதும் அவரின் திட்டமாக உள்ளது.

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்த... மேலும் பார்க்க

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிக... மேலும் பார்க்க

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க