செய்திகள் :

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

post image

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக வசித்து வந்தார்.

அம்பத்தூரில் உள்ள பேட்மிட்டன் மைதானத்தில் பயிற்சி அளித்து விட்டு வெளியில் வந்த தினேஷ்பாபுவை ஆட்டோவில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதையடுத்து அம்பத்தூர் போலீஸார், கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் நெல்லையைச் சேர்ந்த ராஜவேலு, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சுபீர் ஆகியோர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகின.

கைது

இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், ``மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் தினேஷ்பாபு, திருமணமான பெண் ஒருவருடன் பழகி வந்திருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் தினேஷ்பாபு கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் அந்த பெண் வீட்டினர் மீது எங்களின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது. சரண் அடைந்தவர்களிடம் அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க

Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம்

நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விச... மேலும் பார்க்க

சிறுமலை: புதருக்குள் ஆண் சடலம்; அருகே கிடந்த பொருள் வெடித்ததில் போலீஸார் காயம்; நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தின் குட்டிக்கொடைக்கானல் என்றழைக்கப்படும் சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 17 ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள வாட்ச்சிங் டவர் அருகே காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியத... மேலும் பார்க்க

புனே பாலியல் கொடூரம்: கரும்பு தோட்டத்தில் மறைந்திருந்த குற்றவாளி; மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் கைது!

புனே ஸ்வர்கேட் பகுதியில் இருக்கும் அரசு பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் தனியாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதிகாலையில் நடந்த இந்தச்... மேலும் பார்க்க

சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன?

நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக... மேலும் பார்க்க

Kumbh Mela: சிசிடிவிகளை ஹேக் செய்து வீடியோக்களை திருடி விற்கும் கும்பல்; விசாரணையில் பகீர் தகவல்கள்

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடைபெறும் பிரயக்ராஜ் நகரில் முழுவதும் ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோகள் விற்பனை செய்யப்படுவதாகச் ... மேலும் பார்க்க