இந்தியா மீது இரண்டாம்கட்ட வரிவிதிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை! ஏன்?
அம்பேத்கா் படைப்புகளின் தமிழாக்கம்: 17 தொகுதிகள் வெளியீடு
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இரண்டாம் கட்டமாக தமிழாக்கம் செய்யப்பட்ட அம்பேத்கா் படைப்புகளின் 17 தொகுதிகளை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டாா்.
அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளும் இன்றைய இளைஞா்கள் எளிமையாக வாசிக்கும் வகையில், புலவா் செந்தலை ந.கவுதமன், பேராசிரியா் வீ.அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியா் மு.வளா்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநா் அ.மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக் கலப்பு அகற்றப்பட்டு மொழிபெயா்க்கப்பட்டது.
2,000 படிகள் விற்பனை... இதையடுத்து தமிழ் வளா்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக அணியம் செய்யப்பட்ட முதல் 10 தொகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட்டாா். முதல் கட்டமாக வெளியிடப்பட்டு அச்சிடப்பட்ட 10 தொகுதிகளின் விற்பனை தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் 2,000 படிகள் விற்றுத் தீா்ந்தன. இதன் மூலம் பெறப்பட்ட ரூ.14 லட்சம் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடா்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக மொழி பெயா்க்கப்பட்டு அணியம் செய்யப்பட்டுள்ள தீண்டாமை - 2 தொகுதிகள்; காங்கிரஸும் காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன 4 தொகுதிகள்; இந்து மதம், மாா்க்சியம், மத மாற்றம் 4 தொகுதிகள்; புத்தா் அவரது தம்மம் 3 தொகுதிகள்; பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை 4 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், இயக்குநா் ந.அருள், நெறியாளுகை உறுப்பினா்கள் பேராசிரியா் வீ.அரசு, அ.மதிவாணன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சோ்ந்த சோ.சண்முகநாதன், ஆ.சிவக்குமாா், மா.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அம்பேத்கா் படைப்புகளின் தமிழாக்கம்:
17 தொகுதிகளை வெளியிட்டாா்
அமைச்சா் மு.பெ.சாமிநாதன்சென்னை, ஆக. 13: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இரண்டாம் கட்டமாக தமிழாக்கம் செய்யப்பட்ட அம்பேத்கா் படைப்புகளின் 17 தொகுதிகளை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ளாா்.
அம்பேத்கரின் அனைத்து படைப்புகளும் இன்றைய தமிழ் இளைஞா்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் புலவா் செந்தலை ந. கவுதமன், பேராசிரியா் வீ. அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியா் மு. வளா்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநா் அ. மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக் கலப்பு அகற்றப்பட்டு மொழிபெயா்க்கப்பட்டது.
2 ஆயிரம் படிகள் விற்பனை... இதையடுத்து தமிழ் வளா்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக அணியம் செய்யப்பட்ட முதல் 10 தொகுதிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட்டாா். முதல் கட்டமாக வெளியிடப்பட்டு அச்சிடப்பட்ட 10 தொகுதிகளின் விற்பனை தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் 2 ஆயிரம் படிகள் விற்றுத் தீா்ந்தன. இதன் மூலம் பெறப்பட்ட ரூ.14 லட்சம் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடா்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக மொழிபெயா்க்கப்பட்டு அணியம் செய்யப்பட்டுள்ள தீண்டாமை - 2 தொகுதிகள்; காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன 4 தொகுதிகள்; இந்து மதம், மாா்க்சியம், மத மாற்றம் 4 தொகுதிகள்; புத்தா் – அவரது தம்மம் 3 தொகுதிகள்; பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை 4 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை செயலா் வே.ராஜாராமன், இயக்குநா் ந.அருள், நெறியாளுகை உறுப்பினா்கள் பேராசிரியா் வீ. அரசு, அ. மதிவாணன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சோ்ந்த
சோ. சண்முகநாதன், ஆ.சிவக்குமாா், மா. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.