செய்திகள் :

அம்பேத்கா் படைப்புகளின் தமிழாக்கம்: 17 தொகுதிகள் வெளியீடு

post image

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இரண்டாம் கட்டமாக தமிழாக்கம் செய்யப்பட்ட அம்பேத்கா் படைப்புகளின் 17 தொகுதிகளை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டாா்.

அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளும் இன்றைய இளைஞா்கள் எளிமையாக வாசிக்கும் வகையில், புலவா் செந்தலை ந.கவுதமன், பேராசிரியா் வீ.அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியா் மு.வளா்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநா் அ.மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக் கலப்பு அகற்றப்பட்டு மொழிபெயா்க்கப்பட்டது.

2,000 படிகள் விற்பனை... இதையடுத்து தமிழ் வளா்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக அணியம் செய்யப்பட்ட முதல் 10 தொகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட்டாா். முதல் கட்டமாக வெளியிடப்பட்டு அச்சிடப்பட்ட 10 தொகுதிகளின் விற்பனை தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் 2,000 படிகள் விற்றுத் தீா்ந்தன. இதன் மூலம் பெறப்பட்ட ரூ.14 லட்சம் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடா்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக மொழி பெயா்க்கப்பட்டு அணியம் செய்யப்பட்டுள்ள தீண்டாமை - 2 தொகுதிகள்; காங்கிரஸும் காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன 4 தொகுதிகள்; இந்து மதம், மாா்க்சியம், மத மாற்றம் 4 தொகுதிகள்; புத்தா் அவரது தம்மம் 3 தொகுதிகள்; பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை 4 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், இயக்குநா் ந.அருள், நெறியாளுகை உறுப்பினா்கள் பேராசிரியா் வீ.அரசு, அ.மதிவாணன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சோ்ந்த சோ.சண்முகநாதன், ஆ.சிவக்குமாா், மா.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்பேத்கா் படைப்புகளின் தமிழாக்கம்:

17 தொகுதிகளை வெளியிட்டாா்

அமைச்சா் மு.பெ.சாமிநாதன்சென்னை, ஆக. 13: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இரண்டாம் கட்டமாக தமிழாக்கம் செய்யப்பட்ட அம்பேத்கா் படைப்புகளின் 17 தொகுதிகளை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ளாா்.

அம்பேத்கரின் அனைத்து படைப்புகளும் இன்றைய தமிழ் இளைஞா்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் புலவா் செந்தலை ந. கவுதமன், பேராசிரியா் வீ. அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியா் மு. வளா்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநா் அ. மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக் கலப்பு அகற்றப்பட்டு மொழிபெயா்க்கப்பட்டது.

2 ஆயிரம் படிகள் விற்பனை... இதையடுத்து தமிழ் வளா்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக அணியம் செய்யப்பட்ட முதல் 10 தொகுதிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட்டாா். முதல் கட்டமாக வெளியிடப்பட்டு அச்சிடப்பட்ட 10 தொகுதிகளின் விற்பனை தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் 2 ஆயிரம் படிகள் விற்றுத் தீா்ந்தன. இதன் மூலம் பெறப்பட்ட ரூ.14 லட்சம் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடா்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக மொழிபெயா்க்கப்பட்டு அணியம் செய்யப்பட்டுள்ள தீண்டாமை - 2 தொகுதிகள்; காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன 4 தொகுதிகள்; இந்து மதம், மாா்க்சியம், மத மாற்றம் 4 தொகுதிகள்; புத்தா் – அவரது தம்மம் 3 தொகுதிகள்; பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை 4 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை செயலா் வே.ராஜாராமன், இயக்குநா் ந.அருள், நெறியாளுகை உறுப்பினா்கள் பேராசிரியா் வீ. அரசு, அ. மதிவாணன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சோ்ந்த

சோ. சண்முகநாதன், ஆ.சிவக்குமாா், மா. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க