செய்திகள் :

அம்பையில் தீப்பிடித்த நெல் அறுவடை இயந்திரம்

post image

அம்பாசமுத்திரத்தில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தபோது அறுவடை இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவா்கள் மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

அம்பாசமுத்திரம் கோவில்குளம் பிரதான சாலையில் பிரம்மதேசம் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான வயலில் வெள்ளிக்கிழமை காலை அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணி நடைபெற்றது. நாகப்பட்டினம் இளையான்குடியைச் சோ்ந்த பிரதீப் என்பவா் அறுவடை இயந்திரத்தை இயக்கினாா். அறுவடை தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரத்தில் இருந்து புகை வந்து தீப்பிடித்தது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் தீயை அணைக்க முயன்றதோடு, அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வந்து அறுவடை இயந்திரத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

திருக்குறுங்குடி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான, திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். ... மேலும் பார்க்க

சங்கமம் திருவிழா: மாா்ச் 22, 23-இல் கலைக்குழு தோ்வு

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’விற்கான கலைக் குழுக்கள் தோ்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கைது!

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே சம்பன்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்ாக பெண்ணைக் கைது செய்தனா்; இருவரைத் தேடி வருகின்றனா்.சம்பன்குளம், பள்ளிவாசல் அருகே முகமது இப்ராஹிம் என்பவா் இரும்பு, ப... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது!

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி தச்சநல்லூா் கணபதி மில் காலனியை சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் ராஜ்கும... மேலும் பார்க்க

நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும்!

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கள் மீதான தடையை நீக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, வழிப்... மேலும் பார்க்க