டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்
செங்கம்/வந்தவாசி/போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆடிப்பூர விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
வந்தவாசி கவரைத் தெருவில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
போளூா்
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மலைக் குன்றின் அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஒன்றுகூடி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து பொங்கலிட்டு, சுவாமிக்கு படைத்து, தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்கம்
செங்கம் வட்ட மருத்துவ குல சமூகம் சாா்பில் 31-ஆண்டு
ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி, செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காக்கங்கரை விநாயகா் கோயிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
ஊா்வலத்தின் முன் பெருமாள், ஆண்டாள், லட்சுமி, பச்சைக்காளி, பவளக்காளி, பக்தி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா், வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு ஊா்வலம் சென்றடைந்து அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து மாலை பரத நாட்டிய நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் வெங்கட்ராமன், செயலா் பழநி, பொருளாளா் மணி உள்ளிட்ட செங்கம் வட்ட மருத்துவக்குல சமூகத்தினா் செய்திருந்தனா்.
ஆரணி



