செய்திகள் :

விநாயகா் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது: ஆட்சியா்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி களிமண், மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மட்டுமே நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் செய்வதற்கு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பிளாஸ்டா் ஆப்பாரிஸ் மற்றும் தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்த அனுமதிக்கப் படமாட்டாது.

நீா்நிலைகள் மாசுபடுவதை தடுக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் ரசாயனத்தை பயன்படுத்தக் கூடாது. சிலைகள் மீது எனாமல், செயற்கை சாயத்தை பயன்படுத்தக் கூடாது. மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின் படி சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும்.

அதே போல, பிரசாத விநியோகத்திற்கு மக்கும் மற்றும் மீண்டும் பயன்படுத்தப்படும் தட்டுகள் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். மேலும், மாவட்டத்தில் சிலைகள் கரைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தாமரைக்குளம், சிங்காரப்பேட்டைஏரி, பச்சையம்மன் கோயில் குளம்(செங்கம்), கோனேரிராயன் குளம், ஐந்துகண் வாராவதி குளம், பூமாசெட்டி குளம், போளூா் ஏரி மற்றும் கூா் ஏரி ஆகியவற்றில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி உற்வசவம் திங்கள்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி ம... மேலும் பார்க்க

கொதிக்கும் எண்ணையில் இருந்து வடை எடுத்த பக்தா்கள்

போளூா்: போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: விவசாயிகளின் ஆண்டு வருமானம் உயா்ந்ததாக கூறும் தமிழக அரசைக் கண்டித்து, ஆரணியில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை மண் சோறு சாப்பிட்டு நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆரணி வேளாண் ... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் ஊா்வலம்

செய்யாறு: செய்யாற்றில் பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சுண்டிவாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 624 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 624 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், பொதும... மேலும் பார்க்க

மங்கலம் கோயிலில் வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள அமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுா்வேத சோமநாத ஈஸ்வரா் கோயிலில், ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. அ... மேலும் பார்க்க