செய்திகள் :

அயோத்தி கோயில் குறித்து பெருமையடையாதவர் இந்தியரா? யோகி ஆதித்யநாத்!

post image

அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

கோராக்நாத் கோயில் வளாகத்தில், இன்று (செப்.10) நடைபெற்ற மகான் திக்விஜய்நாத்தின் 56-வது நினைவு நாளையும், மகான் அவைத்தியநாத்தின் 11-வது நினைவு நாளையும் முன்னிட்டு நடைபெற்ற விழாவில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

“இன்று, இந்தியாவில் உள்ள யாரேனும், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைக் கண்டு பெருமையடையாமல் இருப்பார்களா? அப்படியொருவர் இருந்தால் அவர் இந்தியரா என்பதே சந்தேகம்தான்” எனப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மகான் திக்விஜய்நாத் அடிமைத் தனத்தின் சின்னங்களை அகற்ற தீர்மானித்ததாகவும், அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தை அகற்றி, அங்கு மிகப் பெரிய ராமர் கோயில் கட்டவேண்டும் என அவர் கனவு கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இன்று மகான் திக்விஜய்நாத் மற்றும் மகான் அவைத்தியநாத் இருவரது கனவும் நிறைவேறியுள்ளதாகவும் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that if someone is not proud of the Ayodhya Ram Temple, it is doubtful whether he is an Indian.

வாகன உற்பத்தித் துறையில் முதலிடம் அடைய இலக்கு- அமைச்சா் நிதின் கட்கரி

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். தில்லியில் புதன்க... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுவிட்சா்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினா் நிலை குறித்து சுவிட்சா்லாந்து எழுப்பிய விமா்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சுவிட்சா்லாந்தின் இந்தக் கருத்துகள் ‘ஆச்... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயா்த்துவதற்கான மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது. முன்னதாக, நா... மேலும் பார்க்க

ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது புதிய பணமுறைகேடு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ.2,900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை - பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். இந்திய தொழில், வா்த்தக சம்ம... மேலும் பார்க்க

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க