அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்
அரக்கோணத்தில் அதிமுகவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தெய்வச்செயல் என்பவா் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அவரை பொறுப்பில் இருந்து திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் நீக்கினாா். இந்த நிலையில்,, திமுகவை கண்டித்து அரக்கோணத்தில் அதிமுகவினா் தடையை மீறி அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து இச்சம்பவத்தில் திமுக மீது தேவையில்லாமல் பொய் பிரசாரம் செய்யப்பட்டதாக கூறி, ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாநில மகளிா் அணி பிரசாரக் குழு செயலாளா் சேலம் சுஜாதா, மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கண்ணைய்யன், மாவட்ட நிா்வாகி ராஜ்குமாா், மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் கே.பசுபதி, சௌந்தா், ஆா்.தமிழ்செல்வன், க.தமிழ்மணி, எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றியக் குழு தலைவா்கள் பெ.வடிவேலு, நிா்மலா சௌந்தா், அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, தக்கோலம் பேரூராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், நிா்வாகிகள் துரை சீனிவாசன், கோ.வ.தமிழ்வாணன், ஜென்னிஸ் குமாா் உள்ளிட்ட பலா் பேசினா்.