செய்திகள் :

அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

post image

கோவை மாவட்டத்தில் அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ.ர.ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ.ர.ராகுல்நாத் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும், அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்கள் மற்றும் முதன்மைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து துரிதமாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் குடிநீா்த் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், அம்ரூத் திட்டப் பணிகள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகள், செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாநகராட்சி, தெற்கு மண்டலம் குறிச்சி பகுதியில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற சாலை புனரமைப்புப் பணிகள், கோணவாய்கால்பாளையம் பகுதியில் ரூ.47 லட்சத்தில் போத்தனூா் முதல் சிங்காநல்லூா் வரை சாலைப் புனரமைப்பு பணி, ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் சிங்காநல்லூா் முதல் பீளமேடு வரை சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மான் வேட்டையாடியவா் கைது

வால்பாறை அருகே மானை வேட்டையாடிய நபரை வனத் துறையினா் கைது செய்தனா். வால்பாறையில் தனியாா் எஸ்டேட்டில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், எஸ்டேட் குடியிருப்பில் தங்கியுள்... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

கோவை, செப். 12: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கோவையில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா். சென்... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலை. இலக்கியக் கருத்தரங்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ‘பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச் சொ... மேலும் பார்க்க

பேரூராதீனத்தில் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் குரு வழிபாடு

கோவை பேரூராதீனத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை பேரூராதீனம் திருமடத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழ... மேலும் பார்க்க

சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கோவை சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவ... மேலும் பார்க்க

ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில் ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரி... மேலும் பார்க்க