செய்திகள் :

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

post image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ஒரு தனியார் விடுதியில் கடலூர் விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர், பொதுநலச் சங்கத்தினரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் பெற்றுக் கொண்டார்.

அவர்களுடன் பேசுகையில், என்னுடைய ஆட்சியில் நான்காண்டு காலத்தில் புயல், வறட்சி, கரோனா என 3 இக்கட்டான சூழ்நிலைகள் அமைந்தன. இருப்பினும், அத்தகைய சூழ்நிலைகளை சிறப்பாக சமாளித்து, அரசின் வருவாய் மூலம் சிறப்பான ஆட்சி மேற்கொள்ளப்பட்டது. என்னுடைய ஆட்சியில் பிரச்னைகளை சந்தித்தபோதிலும், மக்கள் குறையில்லாமல் வாழ்ந்தனர்.

அதிமுக ஆட்சியில் ஆட்சியர் அலுவலகத்துக்கான இடத்தை பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இப்போது நகரின் மையப்பகுதியில் இருக்கவேண்டிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது.

மக்கள் விரும்பும் இடத்தைவிட்டு, மாற்றிடத்தில் பேருந்து நிலையம் அமைப்பது கண்டிக்கத்தக்கது. மக்களுக்காக மட்டுமே ஆட்சியும் ஆட்சியாளர்களும் இருக்கவேண்டுமே தவிர, ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது.

அதிமுகவின் திட்டம் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்தத் திட்டத்தை ஸ்டாலின் அரசு மாற்றுவது சரியானதல்ல. இதனால், வருகிற செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 15) பேருந்து நிலையம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

விவசாயம் செழித்தால்தான், அனைத்து தொழிலும் செழிக்கும். அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இன்றும் நான் விவசாயம் செய்து வருகிறேன். கனமழை வெள்ளத்தால் கடலூரில் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

கரோனா காலகட்டத்தில் அரசுக்கு எந்தவிதமான வருமானம் இல்லாதபோதிலும், ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது.

என்னுடைய ஆட்சியிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் போதைப் பொருள்கள். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சியடையும்.

அனைத்து தரப்பிலான மக்களும் திருப்தியடையும் ஆட்சியை வழங்குவதுதான் எங்கள் நோக்கம். வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

Stalin govt change the plan brought by the ADMK says EPS

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஜூலை 15-இல் கல்வி வளா்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்ய உத்தரவு

காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க

சட்ட பிரிவு 370 மீது ஆளுநா் விமா்சனம்: காங்கிரஸ் கண்டனம்

அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகளுக்கு பின்னா் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க