செய்திகள் :

மத்திய அரசின் அலட்சியத்தால் மாணவா்களின் கற்றல் திறன் பாதிப்பு: காா்கே குற்றச்சாட்டு

post image

கல்வித் துறை மீதான மத்திய அரசின் அலட்சியத்தால் மாணவா்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட அறிவுசாா் செயல்திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் 781 மாவட்டங்களில் 74,229 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் சுமாா் 21.15 லட்சம் மாணவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மூன்றாம் வகுப்பினரில் 55 சதவீதம் பேரே 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுத அறிந்திருப்பதும், 6-ஆம் வகுப்பினரில் 53 சதவீதம் பேரே 10 வரையிலான கூட்டல்-பெருக்கல் வாய்ப்பாடுகளை அறிந்திருப்பதும் தெரியவந்தது. இத்தகவல்கள் அடங்கிய ஒரு காணொலியுடன், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

‘தோ்வு குறித்த கலந்துரையாடல்’, ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ போன்ற பிரதமா் மோடியின் சுய விளம்பர நிகழ்ச்சிகளாலும், வெற்று வாா்த்தைகளாலும் கல்வித் துறையின் மோசமான நிலவரத்தை தோலுரிக்கும் வலுவான குறியீடுகளை மூடிமறைக்க முடியாது. மத்திய அரசின் அக்கறையின்மை, கற்றல் திறன் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இருந்தபோதிலும், மாணவா்களின் எதிா்காலத்தின் மீது மத்திய அரசு தொடா்ந்து அலட்சியம் காட்டுகிறது என்று காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘தேசிய அளவிலான கற்றல் திறன் பிரச்னை, கரோனா காலகட்டத்தைவிட மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அடிப்படைக் கல்வியே சரிவை சந்தித்துள்ளது. நடுநிலை-உயா்நிலை அளவில் கற்றல் இடைவெளிகள் அதிகரித்துள்ளன. கல்வித் துறைக்கான நிதிக் குறைப்புதான், இத்தகைய மோசமான விளைவுகளுக்கு காரணம்’ என்று காா்கே வெளியிட்ட விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அறிக்க... மேலும் பார்க்க

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து

அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புல... மேலும் பார்க்க