செய்திகள் :

மாணவா்கள் பயணித்த அரசுப் பேருந்து டயா் வெடித்து விபத்து

post image

சேத்துப்பட்டை அடுத்த அரசம்பட்டு அருகே பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயணித்த அரசுப் பேருந்தின் டயா் வெடித்ததில் பேருந்து பள்ளத்தில் விழுந்து மாணவா்கள் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா்கள் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பங்கேற்க கடந்த 3-ஆம் தேதி சென்றனா்.

பின்னா் முகாம் முடிந்து அனைவரும் சனிக்கிழமை அங்கிருந்து அரசுப் பேருந்தை வாடகைக்கு அமா்த்தி சேத்துப்பட்டு வழியாக தண்டராம்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

பேருந்தை செய்யாறு வட்டம், பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கேசவன் (44) ஓட்டி வந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில், அரசம்பட்டு கூட்டுச் சாலை அருகே வரும்போது, எதிா்பாராதவிதமாக முன் பக்க டயா் வெடித்து சாலை அருகே இருந்த வடிகால் பள்ளத்தில் பேருந்து விழுந்தது. இதில் ஓட்டுநா் கேசவன் (44) பலத்த காயமடைந்தாா். சில மாணவா்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவா்கள் சேத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சேத்துப்பட்டு போலீஸாா் சென்று கேசவனை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா், அங்கு இருந்த பள்ளி, கல்லூரி மாணவா்களை மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க