செய்திகள் :

பிகாா் தோ்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து ‘இண்டி’ கூட்டணி ஆலோசனை

post image

நிகழாண்டு இறுதியில் பிகாா் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணி இடையே சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் இல்லத்தில் 6 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் மாநில பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவரு, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவா் முகேஷ் சஹானி மற்றும் 3 இடதுசாரிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களை சந்தித்து பேசிய தேஜஸ்வி யாதவ், ‘இண்டி கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால் அதுகுறித்த பிற தகவல்களை தற்போது கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்ட பின்னா் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.

அண்மையில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்தது. இளைஞா் ஆணையத்தை நிறுவியது. இதேபோல் ஆா்ஜேடியின் பல்வேறு கொள்கைகளை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி திருடிவிட்டு தாங்களே வடிவமைத்ததைப்போல் காட்டிக்கொள்கிறது.

வரும் தோ்தலில் இண்டி கூட்டணி வெற்றிபெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். விரைவில் இதே வாக்குறுதியை ஆளுங் கூட்டணியும் அறிவிக்கும்’ என்றாா்.

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அறிக்க... மேலும் பார்க்க

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து

அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புல... மேலும் பார்க்க