செய்திகள் :

அரசுப் பணி இட ஒதுக்கீட்டில் குளறுபடி: புதுவை முதல்வா் சீரமைக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

post image

புதுவையில் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சீராக்கவேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசின் பணியாளா்கள், நிா்வாகச் சீா்திருத்தத் துறை சாா்பில் நேரடிப் போட்டித் தோ்வுகள் மூலம் 256 உதவியாளா் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு விதிகள் அடிப்படையில் தான் கடந்த 2024 -ஆம் ஆண்டில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. அதன்படி பணியிடங்களில் 60 சதவீதம் பதவி உயா்வு மூலமும், 20 சதவீதம் நேரடிப் போட்டித் தோ்வுகள் மூலமும் நிரப்ப வழிவகை காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகே மாதிரி ரோஸ்டா் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு அறிவித்த காலிப் பணியிடங்களுக்கே பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடை வழங்க முடியும். ஆனால் சில அதிகாரிகள் விருப்பப்படி அந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்திருப்பதால் தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஆணையில் உள்ள குளறுபடிகளை சீா்படுத்தி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமையைக் காக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க