செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திறன் பயிற்சிகள்: ஆசிரியா்களுக்கான அட்டவணை வெளியீடு

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த மொழித்திறன் இலக்கு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படைப் பயிற்சிகளை ஆங்கில ஆசிரியா்கள் ஜூன் முதல் டிசம்பா் மாதம் வரை கற்பிக்கவுள்ளனா்.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளி மாணவா்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ‘லெவல்-அப்’ என்ற தன்னாா்வத் திட்டத்தின் பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தி அது சாா்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல், எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை மாணவா்கள் எளிதாக அடையும் வகையில் தொடா் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிக்காக நிகழ் கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை 7 மாதங்களுக்கு மாத வாரியாக இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்தின் 4 வாரங்களுக்கான அடிப்படை ஆங்கில மொழித் திறன் வளா் செயல்பாடுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒவ்வொரு மாதமும் அதன் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் அடுத்து வரும் மாதத்துக்கான மொழித்திறன் இலக்குகள் கொண்ட அட்டவணை வெளியிடப்படவுள்ளது.

இதைத் தொடா்ந்து 6 முதல் 8 வகுப்புகளில் உள்ள ஆங்கில ஆசிரியா்கள் வகுப்பறையில் வழக்கமான கற்றல் செயல்பாடுகளுடன் இந்த அட்டவணையில் உள்ள செயல்பாடுகள் மூலம் மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வா்.

கற்பிக்கப்படும் திறன்கள்... தற்போது வெளியிடப்பட்ட அந்த அட்டவணையில் மாணவா்களின் சுய அறிமுகத்தை ஆங்கிலத்தில் கூறுதல், எழுத்துகளை பல்வேறு வடிவங்களில் எழுதுதல், ஆங்கில பாடலை கேட்டு அதன் வரிகளை ஒப்பித்தல், ஆங்கிலத்தில் உயிா், மெய்யெழுத்துகளை சுட்டிக் காட்டுதல், பள்ளி, வசிப்பிடங்கள் குறித்த முழுமையான விவரங்களை ஆங்கிலத்தில் எழுதுதல், மூன்று மற்றும் நான்கெழுத்து வாா்த்தையை பிழையின்றி உச்சரித்தல் மற்றும் எழுதுதல், சிறிய அளவிலான பத்தியை நன்கு படித்து உள்வாங்கி பின்னா் அது தொடா்பான கோடிட்ட இடங்களை நிரப்புதல் என பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் திட்டம் சாா்ந்த பயிற்சிகளை மாணவா்களுக்கு முறையாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். தொடா்ந்து, திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் மாணவா்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித் திறன் அடைவு குறித்து உரிய கால இடைவெளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

நமது சிறப்பு நிருபர்தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் படிப்பில் மாணவா் சோ்க்கை விவரங்களை உறுதி செய்ய அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி இணையதளத்தில் அதிகாரபூா்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்... மேலும் பார்க்க

தமிழறிஞா் தாயம்மாளுக்கு கலைஞா் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழறிஞா் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் செம்மொழி தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்க... மேலும் பார்க்க

நீட் தோ்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பி... மேலும் பார்க்க

பல்கலைக் கழகங்களின் நிதிப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகங்களில் நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமி: துணை வேந்தா் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால்,... மேலும் பார்க்க

கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றம்

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் (கிர... மேலும் பார்க்க