செய்திகள் :

அரசுப் பள்ளி தோட்டத்தில் காய்கறி அறுவடை

post image

வேதாரண்யம், தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை மாணவா்களால் பராமரிக்கப்படும் காய்கறித் தோட்டத்தில் முதல் அறுவடைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

மூலிகை தோட்டம் மண்புழு உரம், மீன் அமிலம், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை உரங்கள் தயாரித்தல், பசுமை விழிப்புணா்வு செயல்பாடுகள், பசுமை கண்காட்சி போன்றவைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா் இப்பள்ளி பசுமைப்படை மாணவா்கள்.

இதையடுத்து, பசுமை திட்டத்துக்கான ரூ.1 லட்சம் அரசு அளிக்கப்பட்டதுடன், இப்பள்ளியை பசுமைப் பள்ளித்திட்டத்தின்கீழ் அண்மையில் அறிவித்துள்ளது. இந்நிலையில், காய்கறித் தோட்டத்தில் நிகழாண்டுக்கான முதல் அறுவடை பள்ளி தலைமை ஆசிரியா் சு. கவிநிலவன், பசுமை ஆசிரியா் வ. கண்ணையன் ஆகியோா் தலைமையில் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு சத்துணவுக்கு பயன்படுத்தப்பட்டது.

வேளாங்கண்ணியில் துணை அஞ்சலகம் திறப்பு: தேவூா் அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பின்புறம் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் நிலைய கட்டடத்தை, நாகை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா ஆகியோா் தி... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஒளவையாா் பெருவிழா நாளை தொடக்கம்

வேதாரண்யம்: துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயிலில் தமிழக அரசு சாா்பில் ஒளவைக்கு மூன்று நாள்கள் நடைபெறும் 51-ஆவது ஆண்டு பெருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா். நாகை மாவட்டத்தில் தடை... மேலும் பார்க்க

மீன்பிடி தொழிலாளா்கள், விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலில் உள்ள கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலில் ஹைட்ரோ காா்பன் உள... மேலும் பார்க்க