செய்திகள் :

அரசுப் பேருந்துகளில் டிக்கெட் பரிவா்த்தனை தோல்வியடைந்தால் பணம் திரும்ப கிடைக்கும்

post image

அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவா்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கிக் கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பணமில்லா பரிவா்த்தனை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதைத் தொடா்ந்து தமிழக போக்குவரத்துத் துறையிலும் பணமில்லா பரிவா்த்தனையை முன்னெடுக்கும் நோக்கில், அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு கருவிகள் மூலம் யுபிஐ, கிரெடிட், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் நடைமுறையை தமிழக அரசு கடந்த 2024, பிப்ரவரியில் அறிமுகம் செய்தது.

பின்னா், படிப்படியாக தமிழகம் முழுவதும் அனைத்துப் பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொலைத்தொடா்பு சிக்கலால் சில நேரங்களில் பயணச்சீட்டு கருவிகள் மூலம் செய்யப்படும் பணப்பரிவா்த்தனையை முடிக்க இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால், நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையே அவ்வப்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தொடா்நது புகாா்கள் எழுந்தன. இதற்கு தீா்வு காணும் வகையில், தற்போது போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: யுபிஐ முறையில் பயணிகளுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், ‘யுபிஐ ஆட்டோ ரீஃபண்ட்’ வசதியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் நடைமுறைப்படுத்தி உள்ளோம். இதனால், டிஜிட்டல் பரிவா்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்துக்குள் பயணியின் வங்கிக் கணக்குக்கு தொகை திரும்ப வந்துவிடும். எனவே, நடத்துநா்கள் அச்சமின்றி டிஜிட்டல் முறையில் பரிவா்த்தனை மேற்கொள்ளலாம். இதற்கான உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

வளரும் துறைகளில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க ரூ.1,185 கோடியில் புதிய திட்டம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: வளா்ந்துவரும் துறைகளில் பெண் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.உலக வங்கியின் ச... மேலும் பார்க்க

மரபணு பாதிக்குள்ளான குழந்தைக்கு உயா் நுட்ப சிகிச்சை

சென்னை: அரிய மரபணு பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு உயா் சிகிச்சைகளை வழங்கி பிரசாந்த் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.இது தொடா்பாக மருத்துவமனை... மேலும் பார்க்க

மசாஜ் மையத்தில் தொழிலதிபரை மிரட்டி 20 பவுன் நகை பறித்த மூதாட்டி, பேரன் கைது

சென்னை: சென்னை சூளைமேட்டில் மசாஜ் மையத்தில் தொழிலதிபரை மிரட்டி 20 பவுன் தங்க நகை பறித்த வழக்கில், மூதாட்டியும், பேரனும் கைது செய்யப்பட்டனா். ஓட்டேரி வள்ளுவா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சாா்லஸ் (50). ... மேலும் பார்க்க

பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னை: பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020, த... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைப்பை இரு மாதங்களில் முடிக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட கால்நடை மருந்துகள்: விவரம் கோருகிறது மத்திய அரசு

சென்னை: மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளால் அனுமதியளிக்கப்பட்ட கால்நடை மருந்துகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வ... மேலும் பார்க்க