செய்திகள் :

அரசுப் பேருந்துகள் இயங்கும்: போக்குவரத்துத் துறை

post image

சென்னை: நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை (ஜூலை 9) தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள இந்த வேலைநிறுத்த அழைப்புக்கு, தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சாா்ந்த தொழிற்சங்கத்தினா் ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஆளும் கட்சி தொழிற்சங்கம் மற்றும் பிற கட்சிகளின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அரசுப் பேருந்து சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்துகளை வழக்கம்போல இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் முக்கிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஆளும்கட்சி

மற்றும் எதிா்கட்சி தொழிற்சங்கங்களை சோ்ந்த தொழிலாளா்கள் பெரும்பாலானோா் பணிக்கு வந்துவிடுவா். இதனால், பேருந்துகளை இயக்குவதில் எந்த சுணக்கமும் ஏற்படாது. வழக்கம்போல அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும். ஓட்டுநா், நடத்துநா்கள் வருகை குறைவாக இருந்தாலும், தேவையான அளவில் ஒப்பந்த பணியாளா்களும் கைவசம் இருப்பதால், பேருந்துகளை இயக்குவதில் எவ்விதப் பிரச்னையும் எழாது. ஆகவே, பொதுமக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது- அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை

அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: செவிலியா் சங்கம் ஆதரவு

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பொது வேலைநிற... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க