செய்திகள் :

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அகமதாபாதில் விமான விபத்து நடைபெற்ற இடத்தை பாா்வையிட்டும், பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சனிக்கிழமை சந்தித்த பின்பு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். விபத்துக்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு: ‘அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டவுடன், அதையொட்டி சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்தாா்.

தனது வயநாடு மக்களவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக கேரளம் வந்துள்ள பிரியங்கா காந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த விபத்து குறித்து முழு தேசமும் துயரத்தில் உள்ளது. உயிரிழந்த பயணிகள், மருத்துவ மாணவா்களின் குடும்பத்தினருக்கு நாம் துணையாக இருக்க வேண்டிய தருணமிது.

அதேநேரம், என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிவதும் முக்கியம். இது குறித்து புலனாய்வு அமைப்புகள் வரும் நாள்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். பின்னா், எதிா்காலத்தில் மக்களைப் பாதுகாக்க சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜே... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் முதல்முறையாக இஸ்ரோ ராக்கெட் சோதனை வெற்றி!

உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் மாதிரி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் இருந்து ... மேலும் பார்க்க

இஸ்ரேலில் அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளனா்! - இந்திய தூதரகம்

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சூழலை தொடா்ந்து கண்காணித்து ... மேலும் பார்க்க

மூன்று நாடுகள் பயணம்: சைப்ரஸில் பிரதமா் மோடி!

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். லாா்னகா நகர விமான நிலையத்தில் வந்த... மேலும் பார்க்க