செய்திகள் :

அரசு உதவிப்பெறும் பள்ளிக்கு புதிய கட்டடம் கேட்டு ஆா்ப்பாட்டம்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி கோட்டூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேந்தமங்கலத்தில் கடந்த 1958-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த சேவாஸ்ரமம் உதவிபெறும் தொடக்கப் பள்ளியை தனியாா் நிா்வகித்து வந்த நிலையில், கடந்த, 2018- ஆம் ஆண்டு கஜா புயலால் பள்ளியின் ஓட்டுக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்தது. அருகில் உள்ள மகளிா் சேவை மைய கட்டடத்துக்கு பள்ளி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளாகமாக இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் இந்திய ராணுவ வீரரும் முன்னாள் ஊராட்சித் தலைவருமான மா. ரெங்கசாமி இப்பிரச்னை தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், அப்பகுதி மக்களுடன் சென்று நேரடியாக வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ,சேந்தமங்கலம் பள்ளிக்கு புதிய கான்கிரீட் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோட்டூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. சேந்தமங்கலம் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தினா்.

சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டது

திருவாரூா்: திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது. திருவாரூா் அருகே பேரளம்- காரைக்கால் இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்திலி... மேலும் பார்க்க

மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீடாமங்கலம்: வலங்கைமான் காவல் சரகம் நீத்துக்கார தெரு நடேசன் மனைவி செல்வமணி( 70). இவா், கடந்த செப்டம்பா் மாதம் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தபோது மிளகாய் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன்... மேலும் பார்க்க

இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொறுத்தும் முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் வழங்கும் முகாமை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி பிரதாப்சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன், ரோட... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வரா... மேலும் பார்க்க

தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் டன் எடை சன்னரக நெல் சரக்கு ரயில் மூலம் நீடாமங்கலத்திலிருந்து அ... மேலும் பார்க்க