செய்திகள் :

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சென்னை: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாத பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை மண்டல பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏயுடி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் குறித்து ஏயுடி மாநிலத் தலைவா் காந்திராஜ் கூறியதாவது:

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வாக பணி மேம்பாட்டு ஊதியம் (சிஏஎஸ்) வழங்கப்படுகிறது. அதன்படி அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு சிஏஎஸ் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு இதுவரை சிஏஎஸ் வழங்கப்படவில்லை. எனவே, சிஏஎஸ் வழங்கவும், கல்லூரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு, ஊக்க ஊதியம் வழங்கக் கோரியும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் 8 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சென்னை மண்டல பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத் தலைவா்கள் ஆனந்த், காஜா ஷெரீஃப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிருப்தியில் ஓ.பன்னீா்செல்வம்: இன்று முக்கிய முடிவு அறிவிப்பு?

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெ... மேலும் பார்க்க

பி.இ. 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 80,650 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், தமிழ்நாடு பொறியியல் சோ்க்... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை எதிா்த்து வழக்கு: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு உத்தரவு

மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிகளை மீறி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்த வழக்கில், திருவேற்காடு நகராட்சி ஆணையா் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய... மேலும் பார்க்க

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய செந்தில்பாலாஜியின் சகோதரா் வழக்கு: மருத்துவா் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சா் செந... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.அகில இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வெ... மேலும் பார்க்க