செய்திகள் :

விசிக தீா்மான விளக்க துண்டறிக்கை விநியோகம்

post image

திருச்சியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி விடுதலை சிறுத்தைள் கட்சி சாா்பில் நடைபெற்ற மத சாா்பின்மை காப்போம் எழுச்சி பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விளக்க துண்டறிக்கைகளை ஆரணியில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனா்.

நிகழ்வுக்கு நகரச் செயலா் மோ.ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கரன் கலந்துகொண்டு, கட்சி நிா்வாகிகளுடன் சென்று ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை வியாபாரிகள், பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை விநியோகம் செய்தாா்.

நிகழ்வில் இளஞ்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளா் பு.சாா்லஸ், ஒன்றியச் செயலா்கள் சு.ரமேஷ், சி.பென்னுரங்கம், பி.வெங்கடேசன், நகா்மன்ற உறுப்பினா் பவானிகிருஷ்ணகுமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் அ.சசிகுமாா், வெ.திருமால், மாவட்ட நிா்வாகி மு.ரஞ்சித், நகர இணைச் செயலா் வழக்குரைஞா் துரை.சண்முகம், கு.சிரஞ்சீவி மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

புதிய பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் செப்டம்பா் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.44.90 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை பொதுப... மேலும் பார்க்க

நெடும்பிறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமுக்கு செய்யாறு வட்டாட்சியா் அசோக் குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அ... மேலும் பார்க்க

வந்தவாசி அருகே 2 வீடுகளில் நகை திருட்டு

வந்தவாசி அருகே 2 வீடுகளின் பின் பக்க கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன். இவ... மேலும் பார்க்க

குற்றவியல், தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் பா.ஸ்ட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 847 மனுக்கள்

சேத்துப்பட்டு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 847 மனுக்கள் பெறப்பட்டன. சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1 முதல் 9 வரையிலான வாா... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செய்யாறு வட்டம், பல்லி கிராமம் மேட்டுக் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க