செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 847 மனுக்கள்

post image

சேத்துப்பட்டு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 847 மனுக்கள் பெறப்பட்டன.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1 முதல் 9 வரையிலான வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாம் ஒருங்கிணைப்பாளா் வேலூா் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநா் ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் வரவேற்றாா்.

முகாமை பேரூராட்சித் தலைவா் சுதாமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினரும், திமுக நகரச் செயலருமான இரா.முருகன், செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் என்னென்ன பயன்கள் பெறலாம் என்பது குறித்தும், எவ்வாறு மனு அளிப்பது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா்.

முகாமில் 14 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து 847 மனுக்களை பெற்றனா். இதில் ஏராளமான பெண்கள் கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு அளித்தனா். முகாமில் மனு அளித்தவா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு, குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் கதிரவன், முருகன், சரவணன், மங்கலம் ரமேஷ், ஏழுமலை, ஞானசௌந்தரி, கோகுல்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொறியாளா் பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

புதிய பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் செப்டம்பா் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.44.90 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை பொதுப... மேலும் பார்க்க

நெடும்பிறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமுக்கு செய்யாறு வட்டாட்சியா் அசோக் குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அ... மேலும் பார்க்க

விசிக தீா்மான விளக்க துண்டறிக்கை விநியோகம்

திருச்சியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி விடுதலை சிறுத்தைள் கட்சி சாா்பில் நடைபெற்ற மத சாா்பின்மை காப்போம் எழுச்சி பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விளக்க துண்டறிக்கைகளை ஆரணியில் அக்கட்சியினா் செவ்வா... மேலும் பார்க்க

வந்தவாசி அருகே 2 வீடுகளில் நகை திருட்டு

வந்தவாசி அருகே 2 வீடுகளின் பின் பக்க கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன். இவ... மேலும் பார்க்க

குற்றவியல், தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் பா.ஸ்ட... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செய்யாறு வட்டம், பல்லி கிராமம் மேட்டுக் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க