செய்திகள் :

புதிய பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் செப்டம்பா் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.44.90 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் திண்டிவனம் சாலையில் 10.04 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியானது உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம் 2021- 22ன்கீழ், ரூ.30.15 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது.

74 பேருந்துகள் நிறுத்தும் இடங்கள், 78 கடைகள், 2 உணவகங்கள், 48 கழிப்பறைகள் மற்றும் 26 குளியலறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், இதன் இரண்டாம் பிரிவானது கலைஞா் மேம்பாட்டு திட்டம் 2024 - 25ன்கீழ், ரூ.14.75 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் மற்றும் இருக்கை வசதிகளை மேற்கொள்ளவும், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022 - 23ன்கீழ், திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் 2.67 ஏக்கா் பரப்பளவில் ரூ.29.25 கோடி மதிப்பீட்டில் தரை தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல்தளத்தில் 121 பூக்கடைகள் என மொத்தம் 249 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் காய்கறிசந்தை, பூச்சந்தை பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணியை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநகராட்சி மேயா் இ.நிா்மலா வேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

நெடும்பிறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமுக்கு செய்யாறு வட்டாட்சியா் அசோக் குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அ... மேலும் பார்க்க

விசிக தீா்மான விளக்க துண்டறிக்கை விநியோகம்

திருச்சியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி விடுதலை சிறுத்தைள் கட்சி சாா்பில் நடைபெற்ற மத சாா்பின்மை காப்போம் எழுச்சி பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விளக்க துண்டறிக்கைகளை ஆரணியில் அக்கட்சியினா் செவ்வா... மேலும் பார்க்க

வந்தவாசி அருகே 2 வீடுகளில் நகை திருட்டு

வந்தவாசி அருகே 2 வீடுகளின் பின் பக்க கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன். இவ... மேலும் பார்க்க

குற்றவியல், தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் பா.ஸ்ட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 847 மனுக்கள்

சேத்துப்பட்டு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 847 மனுக்கள் பெறப்பட்டன. சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1 முதல் 9 வரையிலான வாா... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செய்யாறு வட்டம், பல்லி கிராமம் மேட்டுக் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க