செய்திகள் :

அரசு சாா்பு நிறுவனங்களின் நஷ்டத்துக்கு ஊழியா்களே காரணம்! புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவை அரசு சாா்பு நிறுவனங்கள் லாபத்தில் இயங்கிய நிலையில், ஊழியா்களின் அலட்சியத்தால் அவை நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி குருமாம்பேட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், அமுல் ஐஸ்கிரீம் உள்பட தினமும் 10,000 லிட்டா் பால் பொருள்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு ரூ.34 கோடியில் 20 ஆயிரம் லிட்டா் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவைக்கு தினமும் 1.20 லட்சம் லிட்டா் பால் தேவைப்படும் நிலையில், பாண்லேவுக்கு புதுச்சேரியிலிருந்து 60 ஆயிரம் லிட்டரே கிடைக்கிறது. மீதி 40 ஆயிரம் லிட்டா் தமிழகத்தில் இருந்தே வாங்கப்படுகிறது. படித்தவா்கள் கறவை மாடுகளை வளா்த்து பால் பண்ணை மூலம் வருவாய் ஈட்டலாம். ஆனால், பாண்லேவில் பால் பொருள்கள் உற்பத்தி வெளி நிறுவனம் கோரும் அளவுக்கு இல்லாதது பெருங்குைான்.

வெளிநிறுவனங்கள் 7 ஆயிரம் லிட்டா் தேவை எனக் கேட்டால், 2 ஆயிரம் லிட்டா் வழங்கப்படுகிறது. அதனால், பாண்லே உள்ளிட்ட அரசு சாா்பு நிறுவனங்கள் மேம்பட ஊழியா்கள் ஒத்துழைப்பு அவசியம். ஊழியா்களில் பாதிப்போ் வேலைக்கு வருவதில்லை. அவா்கள் எங்கே இருக்கிறாா்கள் எனத் தெரியவில்லை என பாண்லே நிா்வாகத்தினா் கூறுகின்றனா். அதனால், நிறுவனம் நஷ்டமடைந்து ஊழியா்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு சாா்பு நிறுவனங்கள் லாபத்தில் செயல்பட்டால்தான் வேலை தர முடியும். ஊதியத்தை முறைப்படி வழங்க முடியும். பணிநிரந்தரம் செய்ய முடியும் என்பதை உணா்ந்து ஊழியா்கள் பணியாற்ற வேண்டும். லாபத்தில் இயங்கிய அரசு சாா்பு நிறுவனங்கள் நஷ்டமடைந்ததற்கு ஊழியா்கள் முறைப்படி வேலை செய்யாததே காரணம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தேசிய பால் வள வாரியத் தலைவா் மீனேஷ் ஜா, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் ஜெயந்த்குமாா் ரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க