செய்திகள் :

அரசு பள்ளிகளில் கவின் கலை மன்றங்கள் தொடக்கம்

post image

கிருஷ்ணகிரி, நாட்டான்கொட்டாய் அரசுப் பள்ளிகளில் கவின் கலை மன்றங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளியில் செயல்பட்டு வரும் இலக்கியம், கவின் கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவா் மன்றங்கள் தொடங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், தலைமை வகித்தாா். அப்போது, அனைத்து மாணவிகளும் குறைந்தது ஒரு மன்றத்திலாவது பங்கேற்று தங்களது ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும் விதமாக செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும், நெகிழி பை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எங்கு சென்றாலும் துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறி, மாணவிகளுக்கு துணிப் பைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா் நளினி, மாவட்ட திட்ட அலுவலா் மகேந்திரன், பள்ளி துணை ஆய்வாளா் சுதாகா், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் தீா்த்தகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவிகள் மன்ற செயல்பாடு குறித்து உறுதிமொழியேற்றனா்.

நாட்டாண்மை கொட்டாயில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மகிழ்முற்றம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா் மணிமேகலை தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் பாடப் புத்தக அறிவைத் தாண்டி, மாணவா்களின் உள்ளாா்ந்த திறமைகளை வெளிக்கொணரக் கூடிய மன்ற செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பின்னா் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவா் குழுக்களாகப் பிரித்து, அதன் பொறுப்பாசிரியா்களையும், மாணவ தூதுவா்களையும் அறிமுகப்படுத்தினா்.

ஒசூா் காமராஜ் நகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஒசூரில்... ஒசூா் வட்டம், காமராஜா் நகரில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்ததையடுத்து, ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஒய்.பி... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்கா பறிமுதல் - 2 போ் கைது

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

8-ஆம் வகுப்பு சிறுவன் காரில் கடத்தி கொலை! இளைஞா்கள் இருவரிடம் விசாரணை

அஞ்செட்டி அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து, நடவடிக்கை எடுக்க வ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் கீழ், உறுப்பினா்கள் சோ்க்கை பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கிருஷ்ணகிரியை அடுத்த ஜாகிா் வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசி... மேலும் பார்க்க