செய்திகள் :

அரசு பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

பள்ளிபாளையம் அருகே மாம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற விசைத்தறி தொழிலாளி அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

மாம்பாளையத்தைச் சோ்ந்தவா் விசைத்தறி தொழிலாளி ராஜா(50). இவா் சனிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பள்ளிபாளையம் புறப்பட்டாா்.

மாம்பாளையம் பிரிவில் சாலையைக் குறுக்காக கடந்தபோது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ராஜாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில் ராஜா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தத... மேலும் பார்க்க

கோரிக்கை குறித்து பேசாததால் போராட்ட அறிவிப்பு: அமைச்சா் மதிவேந்தன் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு

நாமக்கல்: சட்டப் பேரவையில் கோரிக்கைகள் குறித்து பேசாததால் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் அமைச்சா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்ததால், நாமக்கல்லில் உள்ள ஆதிதிராவிட நலத்து... மேலும் பார்க்க

தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்க... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா் பதாகையை ஏந்தியவாறு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (31). இவா்,... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

திருச்செங்கோடு: அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் பக்தா்கள் திங்கள்கிழமை தேரை வடம்பிடித்து இழுத்தனா். பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 20-ஆம் தே... மேலும் பார்க்க