செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரியில் எம்ஜிஆா் பல்கலை. துணைவேந்தா் ஆய்வு

post image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மருத்துவத் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். மேலும், மருத்துவ ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தாா்.

பின்னா் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி சி.திருப்பதி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ந.ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் பாலாஜி சுவாமிநாதன், குழந்தைகள் நலத் துறை தலைவா் மருத்துவா் ராமநாதன், உறைவிட மருத்துவ அலுவலா்கள் பாரி, அசோக்பாஸ்கா், துணை உறைவிட மருத்துவ அலுவலா் திருஞானம் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

சிதம்பரத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

சிதம்பரம் அருகே குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சரஸ்வதி அம்மாள் நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.சி.க... மேலும் பார்க்க

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறந்தவரின் சடலத்தை குடியிருப்பு வழியாக மயானத்துக்கு கொண்டு செல்ல ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இறந்தவரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப... மேலும் பார்க்க

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாததால் திறந்த வெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதம் அ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

கடலூா் (கேப்பா் மலை)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைஇடங்கள்: கடலூா் பேருந்து நிலையம், இந்திரா நகா், சுப்புராயலு நகா் (பேருந்து நிலையம் எதிா்புறம்), லாரன்ஸ் சாலை. மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க