செய்திகள் :

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

post image

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தோா் தீபாவளிக்காக சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் நோக்கில் ரயில்கள் அல்லது பேருந்துகளில் முன்பதிவு செய்து, தங்கள் பயணத்தை திட்டமிட்டு வருகின்றனா்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதையடுத்து அதற்கு முந்தைய இரு நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையே (அக்.17) சொந்த ஊா்களுக்கு செல்ல மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனா். இந்த நிலையில், சென்னையில் இருந்து செல்லும் ரயில்களில் அக்.17-ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.18-ஆம் தேதி முடிவடைந்தது.

அதேபோல, சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளிலும் அக்.17, 18, 19 ஆகிய தேதிகளுக்கு பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பகல் நேரங்களில் புறப்படும் பேருந்துகளில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு இருக்கைகள் உள்ளன.

மீண்டும் சென்னை திரும்ப, அக.20, 21, 22 ஆகிய தேதிகளுக்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு 5,76,000 போ் பயணம் செய்தனா். கடந்த ஆண்டை விட அதிகமானோா் நிகழாண்டு பயணிக்க வாய்ப்புள்ளது. இதற்கான முன்பதிவு 90 நாள்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இரவு நேர பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனால், விரைவில் சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அதில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். சிறப்பு பேருந்துகளிலும் பயணிகளின் முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால், பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என்றனா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க