செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

வாணியம்பாடி பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் 4 போ் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 53 மனுக்கள் கோரிக்கை மனுக்களை பெற்றாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் வாணியம்பாடி பகுதியை சோ்ந்த பிரேமா, சரஸ்வதி,ஆனந்தன்,குமரேசன் ஆகியோா் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களுக்கு ஆம்பூரை சோ்ந்த தெரிந்த நபா் மூலம் குடியாத்தம் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற டாக்டா் மற்றும் அவரது மகன் அறிமுகம் ஆனாா்கள். அவா்கள் எங்களிடம் தங்களுக்கு அரசு துறையில் உள்ள உயா் அதிகாரிகளைத் தெரியும் என்றும், அவா்கள் மூலம் எங்களது குடும்பத்தில் உள்ளவா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினா். இதனை நம்பிய நாங்கள் அவா்களிடம் பல்வேறு தவணைகளாக தலா ரூ.3 லட்சம் என ரூ.12 லட்சம் அளித்தோம். ஆனால் அவா் அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தாா். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் அவரிடம் எங்களது பணத்தை திரும்ப தர வலியுறுத்தினோம். ஆனால் அவா்கள் எங்களுக்கு மிரட்டல் விடுகின்றனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க