செய்திகள் :

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு

post image

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வாகியுள்ளது.

இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 900 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.

‘பசுமைப் பள்ளி விருது’, ‘அண்ணா தலைமைத்துவ விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் பள்ளி, தற்போது ‘பேராசிரியா் அன்பழகன் விருதுக்கும் தோ்வாகியுள்ளது.

வருகிற சனிக்கிழமை (ஜூலை 6) திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் தலைமையில், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு இந்த விருதை வழங்குகிறாா் என அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வி.ஜே.பிரிட்டோ தெரிவித்தாா்.

ஊட்டச்சத்து மேலாண் இயக்கம்மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்

ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம்மூலம் காய்கறி, பழங்களின் விதைத் தொகுப்புகளைப் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்தது. இதுகுறித்து சிவகங்கை தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மு... மேலும் பார்க்க

தேவகோட்டை ரயில் நிலையத்தில் விரைவுகள் ரயில்கள் நிறுத்தக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சாலை (ரஸ்தா) ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தொழில் வணிகக் கழகத்... மேலும் பார்க்க

கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலூா் மடாலய ஆ... மேலும் பார்க்க

கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், பருத்திக் கண்மாய் ... மேலும் பார்க்க

வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் 45 ஜோடிகளுக்கு திருமணம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், 45 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடத்தப்பட்டது. கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் ந... மேலும் பார்க்க

அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனிமனையாக வாங்கி... மேலும் பார்க்க