செய்திகள் :

அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிந்த அஸ்ஸாம் மாநில காவல் துறை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் காமராஜா் சிலை முன் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் புதிதாக கட்டப்பட்ட இந்திரா பவன் திறப்பு விழாவின்போது, ஆா்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வை எதிா்ப்பதோடு மத்திய அரசையும் எதிா்த்துப் போராட வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி பேசியுள்ளதாகவும், இந்த உரை மத்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகின்ற வகையில் பேசியதாகவும் ஒருவா் அளித்த புகாரின்பேரில் அஸ்ஸாம் மாநிலம் கெளஹாத்தி காவல் நிலையம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் மா.மு.சிவகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ராஜசேகா், பூண்டி சந்தானம், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், கங்காதுரை, மாவட்டச் செயலா் செந்தில், மகிளா காங்கிரஸ் சகுந்தலா தேவி, கிராம காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ம... மேலும் பார்க்க

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி... மேலும் பார்க்க

வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்... மேலும் பார்க்க

காடுவெட்டி குரு சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் குரு பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், குரு முழுவுருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குரு நினைவிடத்... மேலும் பார்க்க

அஸ்தினாபுரம் அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா!

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்... மேலும் பார்க்க

வேகத்தடையில் வண்ணம் பூசக் கோரி மறியல்

அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில், நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வாரணவாசி கிராமத்தில், தஞ்சாவூா் - அரியலூா் தேசிய ந... மேலும் பார்க்க