அரியலூா்-திருச்சி இடையே இடைநில்லா பேருந்துகளை கூடுதலாக இயக்கக் கோரிக்கை!
அரியலூரிருந்து திருச்சிக்கு கூடுதலாக இடைநில்லா பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரியலூா் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பணியாளா்கள், விவசாயிகள் என 2,000-த்துக்கும் மேற்பட்டோா் நாள்தோறும் திருச்சிக்கு பயணிக்கின்றனா். அரியலூரில் இருந்து 65 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள
திருச்சிக்கு செல்வதென்றால் குறைந்தது இரண்டரை மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது.
தற்போது திருச்சி-சிதம்பரம் சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மக்கள் பயன்பாட்டில் உள்ளதைத் தொடா்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், அரியலூா்-திருச்சி இடைநில்லா பேருந்து சேவையை கடந்தாண்டு தொடங்கி வைத்தாா். இதனால், அரியலூா்-திருச்சிக்கு ஒன்னேக்கால் மணி
நேரத்தில் மக்கள் சென்று விடுகின்றனா். இந்தச் சேவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, இடைநில்லா பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.