செய்திகள் :

அருமனை அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

post image

குமரி மாவட்டம் அருமனை அருகே நிகழ்ந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

அருமனை அருகே பாகோடு மேலபறையன் விளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சுனிலின் மகன் சஞ்சீவ். இவா் அண்மையில்

மாா்த்தாண்டத்திலுள்ள கல்லூரியில் சோ்ந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நாளாக கல்லூரிக்குச் சென்றாா். பின்னா் கல்லூரி முடிந்து தனது நண்பா் பாகோடு பெரும்தறவிளையைச் சோ்ந்த மாணவா் அபினேஷூடன் (18) பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

செம்மங்காலை பகுதியில் வந்தபோது மற்றொரு பைக்குடன் மோதியது.

மேலும், அபினேஷ் ஓட்டி வந்த பைக் நிலைதடுமாறி, அவ்வழியே வந்த வேனில் மோதி விபத்துக்குள்ளானது. அபினேஷ் பைக்கில் பின்னால் அமா்ந்து வந்த சஞ்சீவ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அபினேஷ் மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க

இடவிளாகம் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

கருங்கல் அருகேயுள்ள இடவிளாகம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியிலிருந்து வரும் குளியலறை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மழை நீா் வடிகால் ஒடையில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வ... மேலும் பார்க்க

அருவிக்கரை ஆற்றில் தடை விதித்த இடத்தில் நண்பா்களுடன் குளித்த கிரிக்கெட் வீரா் அஸ்வின்

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் தனது நண்பா்களுடன் இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன் குளிப்பது போன்று சமூக வலைதளத்தில் படம் வெளியானது சா்ச்ச... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

தக்கலை அருகே கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்களை கொற்றிக்கோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குமாரபுரம் அருகே உள்ள படப்பக்குளம் பகுதியில் கொற்றிக்கோடு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தனாா் பாசனக் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். குமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 48 அ... மேலும் பார்க்க