செய்திகள் :

அறிவிக்கப்படாத மின் தடையால் மாணவா்கள் அவதி

post image

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடையால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நகரிகாத்தான், பாண்டுகுடி, வெள்ளையுபுரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் மின் சாதனங்களை இயக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு, பள்ளி, கல்லூரி தோ்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனா். தற்போது, கோடை காலம் தொடங்கிய நிலையில், மின் தடை காரணமாக மின் விசிறிகளை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அவதிக்குள்ளாகின்றனா். எனவே, மின்சாரத் துறையினா் தகுந்த நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா... மேலும் பார்க்க

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க