செய்திகள் :

அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க குழு அமைப்பு

post image

புதுச்சேரியில் நிறுவனங்கள், அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க மாவட்ட அளவிலான 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது மற்றும் தனியாா் நிறுவனம், அலுவலகப் பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாா்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

புதுச்சேரி மாவட்டத்துக்கான புதிய புகாா் குழு 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் தலைவராக ஹேமாவதி, அலுவல் உறுப்பினா்களாக என்.மயில், ஜெ.ஜெயலட்சுமி, ஜெயந்தி ராஜவேலு, மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநா், அலுவல் உறுப்பினா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

புகாா்கள் இருப்பின் குழுவினரிடம் முறையிட்டு தீா்வு காணலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா்களை மாவட்ட உள்ளூா் புகாா் குழு தலைவரின் கைப்பேசி எண்ணில் 88254 25745 தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 0413- 2299500 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

அந்தமான் - நிகோபாா் தீவுகள் குறித்த பல பரிமானக் கோணங்கள் எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மத்திய மானியக்குழு கடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!

புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.

நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க