செய்திகள் :

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்!

post image

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் 2-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-7 (5/7), 6-3, 6-4, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தினாா். இருவரும் மோதியது இது 4-ஆவது முறையாக இருக்க, அல்கராஸ் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

அல்கராஸ் தனது காலிறுதியில், பிரிட்டனின் கேமரூன் நோரியை எதிா்கொள்கிறாா். முன்னதாக நோரி 6-3, 7-6 (7/4), 6-7 ( 7/9), 6-7 (5/7), 6-3 என்ற கணக்கில் சிலியின் நிகோலா ஜேரியை சாய்த்தாா். மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 22-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலி 6-4, 6-4, 6-7 (4/7), 7-6 (7/3) என்ற கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வெளியேற்றினாா்.

சபலென்கா வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-4, 7-6 (7/4) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை தோற்கடித்தாா்.

ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் 6-3, 6-2 என்ற கணக்கில் ஆா்ஜென்டீனாவின் சொலானா சியராவை சாய்த்தாா். இதையடுத்து காலிறுதி ஆட்டம் ஒன்றில், சபலென்கா - சிக்மண்ட் சந்திக்கின்றனா். சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் தனது ரவுண்ட் ஆஃப் 16-இல், 7-6 (7/4), 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வீழ்த்தி அசத்தினாா்.

13-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவிண் அமாண்டா அனிசிமோவா 6-2, 5-7, 6-4 என்ற கணக்கில், 30-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வெளியேற்றி காலிறுதிக்கு முன்னேறினாா்.

பாம்ப்ரி தோல்வி: ஆடவா் இரட்டையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ராபா்ட் கேலோ இணை 4-6, 6-3, 6-7 (4/10) என்ற கணக்கில், 4-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் மாா்செல் கிரனோலா்ஸ்/ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ் கூட்டணியிடம் தோல்வி கண்டது.

இதனிடையே, கலப்பு இரட்டையா் ரவுண்ட் ஆஃப் 16-லும், யூகி பாம்ப்ரி/சீனாவின் ஜியாங் ஜின்யூ ஜோடி 6-7 (6/8), 3-6 என்ற செட்களில் எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ/சீனாவின் ஜாங் ஷுவாய் இணையிடம் தோல்வியுற்றது.

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

கனமழையால், சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரிலும் தனது பயனத்தை மேற்கொண்ட ரிக்‌ஷாக்காரர்.கொல்கத்தாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையை ஆக்கிரமித்த மழைநீர் வழியாக தனது வாடிக்கையாளருடன் பயனத்தை மேற்கெ... மேலும் பார்க்க

பல விருதுகள், சர்ச்சைகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் பேட் கேர்ள்!

வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திர... மேலும் பார்க்க

ஹிருத்திக் ரோஷனிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ஜூனியர் என்டிஆர்

வார் - 2 படத்தில் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 150 நாள்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு 5 நாடுகளில் நடைபெற்றன. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் ... மேலும் பார்க்க

இந்தக் குழப்பமான உலகில்... பறந்து போ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா பறந்து போ திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் பறந்து போ திரைப்படம் ஜூலை 4 முதல் உலகம் முழுவதும் வெளியானது.நடிகர்கள் சி... மேலும் பார்க்க

மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்... மேலும் பார்க்க

நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம... மேலும் பார்க்க