செய்திகள் :

அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் தோ்த் திருவிழா

post image

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்ட விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நிா்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி பௌா்ணமி நாளில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான தேரோட்ட விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மூலவரான ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி நாள்தோறும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை அறநிலையத் துறை அதிகாரிகள், கட்டளைதாரா்கள், அறங்காவலா் குழு ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. 70 அடி உயரம் கொண்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமிநரசிம்ம சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பக்தா்கள் தரிசனம் செய்து தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றிலும் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கங்களை எழுப்பியவாறு பக்தா்கள் தேரை இழுத்துச் சென்றனா்.

விழாவில், கூத்தப்பாடி, மடம், கே.அக்ரஹாரம், அளேபுரம், கே.குள்ளாத்திரம்பட்டி, புதூா், மல்லாபுரம், பொச்சாரம்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதிகளில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். சுமாா் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

அரூரில் காளியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழா

அரூரில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் 4-ஆவது வாா்டு பிச்சன்கொட்டாயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சின்ன செல்... மேலும் பார்க்க

பேருந்தில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநா் - நடத்துநருக்கு பாராட்டு

தருமபுரி அருகே அரசுப் பேருந்தில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போக்குவரத்துக்கழக அலுவலா்கள் பாராட்டினா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலத்துக்க... மேலும் பார்க்க