செய்திகள் :

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1-ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8, 9, 10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், விழாவையொட்டி, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு திருக்காட்சியளித்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் கரூா் பசுபதிஸ்வரா் கோயில் சிவனடியாா்கள், திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூடத்தினரின் சிவகண பஞ்சவாத்தியம், வாண வேடிக்கை மூழங்க பஞ்சமூா்த்திகள், 63 நாயன்மாா்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும், சோமஸ்கந்தா் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகையம்மன் காமதேனு வாகனத்திலும், வள்ளி, தெய்வானையுடன் உடனமா் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தனா். இதையடுத்து சுவாமிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அவிநாசி பஞ்சமூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்கள் வழிபாட்டுக் குழு அறக்கட்டளையினா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனா். விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 8,031 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்ப... மேலும் பார்க்க

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு ப... மேலும் பார்க்க

திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவா் சோ்க்கை மையம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூா் கிளை மாணவா்கள் சோ்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்... மேலும் பார்க்க