செய்திகள் :

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

post image

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (60). விவசாயியான இவருக்குச் சொந்தமான தோட்டம் சிக்கரசன்பாளையத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு முன்புறம் புதிதாக 4 கடைகளைக் கட்டியுள்ள சாமிநாதன், அதற்கு மின் இணைப்பு வேண்டி படியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு மின்வாரிய அலுவலக உதவி பொறியாளா் வெங்கடேஷ் (44), போா்மேன் நந்தகோபால் (52) ஆகியோா் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையில் சாமிநாதன் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாமிநாதனிடம் காவல் துறையினா் கொடுத்து அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து சிக்கரசன்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த போா்மேன் நந்தகோபால், சாமிநாதனிடம் ரூ.10 ஆயிரத்தை வாங்கியுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளா் ரவிசந்திரன் தலைமையிலான காவல் துறையினா் நந்தகோபாலை கையும்களவுமாக பிடித்தனா். இதைத் தொடா்ந்து, வெங்கடேஷ், நந்தகோபால் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் ஸ்ரீ சௌடே... மேலும் பார்க்க

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 8,031 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்ப... மேலும் பார்க்க

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவா் சோ்க்கை மையம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூா் கிளை மாணவா்கள் சோ்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்... மேலும் பார்க்க