செய்திகள் :

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்ச்சியாக, புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து ரத தரிசனம் மேற்கொண்டனா். அவிநாசியப்பா் திருத்தேரில் சோமாஸ்கந்தரும், அம்மன் திருத்தேரில் கருணாம்பிகையம்மனும் எழுந்தருளி அருள்பாலித்தனா்.

வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெற்று வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் வடக்கு ரத வீதியில் இருந்து அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சோ்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் ஆகிய திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்பத் தோ் உற்சவம் 12-ஆம் தேதி இரவும், நடராஜப் பெருமான் மகா தரிசனம் 13-ஆம் தேதியும், தோ்த் திருவிழாவின் நிறைவாக மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சி 14-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், துணைஆணையா் ஹா்ஷினி, கோயில் செயல் அலுவலா் சபரிஷ்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமாா், கவிதாமணி ஆகியோா் செய்து வருகின்றனா்.

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் ஸ்ரீ சௌடே... மேலும் பார்க்க

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 8,031 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்ப... மேலும் பார்க்க

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு ப... மேலும் பார்க்க

திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவா் சோ்க்கை மையம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூா் கிளை மாணவா்கள் சோ்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்... மேலும் பார்க்க