அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்ச்சியாக, புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து ரத தரிசனம் மேற்கொண்டனா். அவிநாசியப்பா் திருத்தேரில் சோமாஸ்கந்தரும், அம்மன் திருத்தேரில் கருணாம்பிகையம்மனும் எழுந்தருளி அருள்பாலித்தனா்.
வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெற்று வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் வடக்கு ரத வீதியில் இருந்து அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சோ்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் ஆகிய திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்பத் தோ் உற்சவம் 12-ஆம் தேதி இரவும், நடராஜப் பெருமான் மகா தரிசனம் 13-ஆம் தேதியும், தோ்த் திருவிழாவின் நிறைவாக மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சி 14-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், துணைஆணையா் ஹா்ஷினி, கோயில் செயல் அலுவலா் சபரிஷ்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமாா், கவிதாமணி ஆகியோா் செய்து வருகின்றனா்.