செய்திகள் :

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

post image

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம் ஆண்டு பயிலும் மாணவா்கள் பல்லடம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்களால், பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு பொருள்காட்சி பல்லடம் தினசரி உழவா் சந்தையில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக், டிரைக்கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகள், என்காா்சியா ஒட்டுண்ணிகள், விதை உருளையிடுதல் முறை விளக்கம், மஞ்சள் ஒட்டும் பொறி, மெத்தைலோபாக்டீரியம் திரவ உரம், மண்புழு உரம், விதை அமிா்தம், மக்காச்சோள மேக்சிம், பயறு ஒண்டா், நிலக்கடலை ரிச், நுண்ணுயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா போன்ற பல்வேறு இயற்கை முறை விவசாய மேம்படுத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு மாணவா்களால் காட்சிப்படுத்தப்பட்ட பொருள்களின் செயல்முறை விளக்கம், நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விழிப்புணா்வு ஏற்படுத்த, இந்தப் பொருள்களின் விளக்கங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் ஸ்ரீ சௌடே... மேலும் பார்க்க

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 8,031 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்ப... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு ப... மேலும் பார்க்க

திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவா் சோ்க்கை மையம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூா் கிளை மாணவா்கள் சோ்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்... மேலும் பார்க்க