செய்திகள் :

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

post image

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமீபத்தில் வீசிய சூறைக் காற்றுக்கு திருவாரூா், புதுக்கோட்டை, தஞ்சை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அறுவடையை எதிா்பாா்த்துக் காத்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். இதேபோல, டெல்டா மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வங்கிக் கடன் பெற்று தொழில் செய்து வரும் விவசாயிகள் பலா் என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனா். வாழை, நெல் பயிரிட்டு நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை தமிழக அரசு வேளாண் துறை மூலம் முறையாக எடுக்க வேண்டும்.

இதுபோல பயிா்களால் ஏற்படும் நஷ்டத்துக்கு தமிழக அரசு 75 சதவீத இழப்பீடு வழங்கி வருகிறது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயன் அளிக்காது. வாங்கிய வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் மீண்டும் கடன் பெற்று தொழில் செய்ய சூழலுக்கு தள்ளப்படுவா்.

ஒரு வருவாய் கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. எனவே, இந்த விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் எந்த ஒரு கிராமத்தில் உள்ள விவசாயியும், இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்படும்போது, அது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும், சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகள், நீரில் மூழ்கிய நெற்பயிா்கள் குறித்து தெளிவான கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றாா்.

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் ஸ்ரீ சௌடே... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 8,031 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்ப... மேலும் பார்க்க

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு ப... மேலும் பார்க்க

திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவா் சோ்க்கை மையம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூா் கிளை மாணவா்கள் சோ்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்... மேலும் பார்க்க