செய்திகள் :

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

post image

அவிநாசி - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் மு.சரவணன் அறிவுறுத்தினாா்.

திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டம், அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட மாநில நெடுஞ்சாலையான அவிநாசி- மேட்டுப்பாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.81.90 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இதில் அவிநாசி, ஆட்டையாம்பாளையத்தில் இருந்து நரியம்பள்ளி வரை நடைபெறும் பணிகளின் தரத்தை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் மு.சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அ.ச.விஸ்வநாதன், கோட்டப் பொறியாளா் ஈ.ரத்தினசாமி, தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் மு.கிருஷ்ணமூா்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

திருடிச் சென்ற மாடுகளை மீட்டு தரக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

திருடிச் சென்ற 4 மாடுகளை மீட்டுத் தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் ராமலிங்க சொக்கவேல் (75)). இவா், திருப... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே லாரியை திருடிய 3 போ் கைது

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் லாரியை திருடிச் சென்ற 3 பேரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையத்தைச் சோ்ந்தவா் சுந்தரம். இவா் தனது லாரி... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: மத்திய அமைச்சா் எல்.முருகன்

கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். பாஜக சாா்பில் சமூக ஊடகவியலாளா்கள் சந்திப்பு, தொழில் வல்ல... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குண்டடம்

குண்டடம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட... மேலும் பார்க்க