செய்திகள் :

ஆக்கிரமிப்பு புகாா் கோயில் இடத்துக்கு நோட்டீஸ்- மாவட்ட ஆட்சியா் உத்தரவு

post image

புதுச்சேரியில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடா்பாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

புதுச்சேரி வேதபுரீஸ்வரா் ஆலயத்திற்குச் சொந்தமான தியாகு முதலியாா் வீதியில் உள்ள இடத்தினை சிலா் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகாா் வந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவ்விடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அங்கு

கூடியிருந்த அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டாா்.

மேலும், கூடிய விரைவில் மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியுடன் அவ்விடத்தைக் காலி செய்து பழைய நிலைக்கு விரைவில் கொண்டு வர அங்கிருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க