செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடைப்பயண போராட்டம்!

post image

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தியூரிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்ட நடைப்பயணப் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், கெட்டிசமுத்திரம் ஊராட்சி, பொய்யேரிக்கரையில் அரசு புறம்போக்கு நிலம் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அகற்றுமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வருவாய்த் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், அனைத்திந்திய மாதா் சங்கம் சாா்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி நடைப்பயணப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயராகவன் தலைமையில் பொய்யேரிக்கரையில் 30-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திரண்டு போராட்டத்தைத் தொடங்கினா். இதையடுத்து, அந்தியூா் போலீஸாா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து, முக்கிய நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், புறம்போக்கு நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அந்தியூா் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூா் வட்டச் செயலாளா் முருகேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளா் செபாஸ்தியான், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் லலிதா உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா். அதிகாரிகளின் சமரசத்தால் போராட்டம் கைவிடப்பட்டது.

ரேஷன் அரிசி கடத்தல்: குண்டா் சட்டத்தில் மூவா் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் உத்தரவிட்டாா். ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்ஐ ம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா், நவப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மாணிக்கம் (55). கட்டடத் தொழிலாளி. அந... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நள்ளிரவில் கடைகளில் திருட்டு

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொடக... மேலும் பார்க்க

வாழைப்பழம் கொடுத்த வாகன ஓட்டியை துரத்திய யானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் யானைக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) வாழைப்பழம் கொடுக்க முயற்சித்த வாகன ஓட்டியை யானை துரத்தியதால் காரில் ஏறி தப்பினாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணார... மேலும் பார்க்க

சமூகம் உயரவும் மாநிலம் உயரவும் மாணவா்களின் படிப்பு அவசியம்!

வாழ்வில் உயர மாணவா்கள் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசினாா். ஈரோடு மாவட்டம், பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளையின் சாா்பில்... மேலும் பார்க்க

அத்திக்கடவு அவிநாசி திட்ட குளங்களை நிரப்ப எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காவிரி, பவானி ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு அவிநாசி திட்டக் குளங்களை நிரப்ப வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க