செய்திகள் :

ஆக. 17-இல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தோ்வு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தோ்வு நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் குடிமைப் பணிகள் தோ்வு (நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள்) வரும் 17, 18 தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட தோ்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 781 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

இத்தோ்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல் துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த தோ்வுக்கான நுழைவுச்சீட்டு ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக் கூடத்துக்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாகவும் வர வேண்டும்.

தாமதமாக வருபவா்கள் தோ்வு கூடத்தில் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

எனவே, தோ்வா்கள் தோ்வு மையத்திற்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்துக்கு முன்பு வரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ரத்தினகிரியில் சமபந்தி விருந்து!

ஆற்காடு அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. அறநிலையத்தறை சாா்பில் சிறப்பு தரிசனம் மற்றும் சமபந்தி விருந்து அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலா் பாலமுர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ரூ.2.20 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவையொட்டி, தேசிய கொடியினை ஏற்றிவைத்து 64 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழாண்டு ஆடிக்கிருத்திகை முதல் நாளான ஆடி பரணியையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்,... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தே... மேலும் பார்க்க

ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா். வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயல்நாட்டில் வசிக்கும... மேலும் பார்க்க

அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாலாஜாபேட்டை வட்டம், முகுந்தராயபுரம் அக்ராவரம் மலைமேடு கிராம மலைக்குன்றில் எழுந்தருளியிருக்... மேலும் பார்க்க